vidangan

A2.அப்போது பணக்கட்டு – இப்போது சில்லறை

பணக்கட்டு 3 Comments

அப்போது-

வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.

வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.

இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.

இப்போது-

மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.

A1.பசி

காமம் No Comments

அவனுக்கு
உடம்பில்
அவளுக்கு
வயிற்றில்பரிமாறிக்கொண்டார்கள்.

15.பக்தர்கள்

பக்தர்கள் 2 Comments

வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

14.வல்லவன்

வல்லவன் 1 Comment

விட்டில் பூச்சி

வாழ்க்கையில்

வெளிச்சத்தை
துணையாக்குபவன்
புத்திசாலி
இருட்டில்
நடக்க பழகியவன்
அனுபவசாலி
அங்கேயே
அமர்ந்து கொண்டவன்
முட்டாள்
முன்னவனை
பின்னவன்
மிஞ்சினாலும்
வல்லவனுக்கு
வல்லவன் உண்டு
வையகத்தில்..

13.ஆணவம்

தாய்மை, நான் 1 Comment

அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..

பாராழும் ராஜாவை
போல் – கருவரை
ஆண்டவன்
நான்..

அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..

பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..

தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு

கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..

பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..

கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் – எங்களை..

விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..

விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்…

அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..

என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..

தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்…

13.சிவப்பு செதில்கள்

காதல் No Comments

கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..
மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..
உனக்கும்
எனக்குமான
தூரம் – துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..
தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்
என்னை சுற்றி
மின்னல் – உன்
கண்கள் சுற்றி
மழை
நம்மை சுற்றி
வெளி..

12.தன்னலதாயின் உறவுகளில்

தாய்மை No Comments

தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு

தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்

மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் – நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்

தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர…

ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே

மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்….

11.உறவுகள் ஊருக்காக

மரணம் No Comments

அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது

உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது…….

சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்

பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்

தபால்காரரின்
வசதிக்காக….!

உறவுகள்
ஊருக்காக…

10.தாய்மடி வாசம்

தாய்மை 1 Comment

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்…

எப்போதவது
கிடைக்கக்கூடும்….

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்….

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்…

9.எதுவோ அதுவே

காதல் No Comments

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது…

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது…

8.படுக்கையில் நான்

நான் No Comments

படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்

படுக்கையில்
நான்
கண்ணாடியில்

கையில்
காணவில்லை
பல் துலக்கி

படுக்கையில்
நான்…

7.எனக்காய்

மரணம் No Comments

எனக்காய்
ஏங்குகிறது..

பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்

மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்

இருந்தும்
நடை பிணமாய்…

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.