
அன்பாகவே நீ என்னுள் இருக்கின்றாய்!
இன்றைய நாளளவிலும்!
இனி எப்போதும்!
தேவதையாகவும்,
குழந்தையாகவும்,
தோழியாகவும்,
என் சரிபாதி உயிராகவும்!
எப்போதும் விட
இபோதும்,
அன்பானவளாகவே
நீ என்னுடன் பயணிக்கின்றாய்!
உன் துணையுடனே நான் எப்போதும்!

அன்பாகவே நீ என்னுள் இருக்கின்றாய்!
இன்றைய நாளளவிலும்!
இனி எப்போதும்!
தேவதையாகவும்,
குழந்தையாகவும்,
தோழியாகவும்,
என் சரிபாதி உயிராகவும்!
எப்போதும் விட
இபோதும்,
அன்பானவளாகவே
நீ என்னுடன் பயணிக்கின்றாய்!
உன் துணையுடனே நான் எப்போதும்!
வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..

கண்கள் விட்ட கண்ணீர்
எதுவாக இருக்கும்
நீ இல்லா காரணங்களில்?
அவைகளாகத்தான் இருக்கமுடியும்
நீயில்லா காரணங்கள்.

நான் தனிமைப்பட்ட
எல்லா நேரங்களிலும்
உன் நினைவுகளின்
ஒசைகளே உயிர்தருகின்றன..
பின் எதுக்கடி
விட்டுப்பிரிகின்றாய்
என்னை நொடிப்பொழுதுகளில்..
ஆயிரம் பிறைகாண
காத்திருக்கின்றன கண்கள்
நாம் என்ற சந்திப்பின்
நிகழ்வுகளுக்கா..
வரும் வரை காத்திருக்கும்
என் கண்கள்..
உன் நினைவுகளின்
கூடாரத்தில்
நம்பிக்கை என்ற காதலில்…
![]()
வாழ்கையின் வழியிலே
மங்கையின் ஒளியிலே
காதல் படித்தேன்
அவள் நேஞ்சின் ஏட்டிலே!
என்னிலே ஆசைகள்
எண்ணிலா நிலைகளில்
அவள் மீதிலே கொண்டதேன்?
வானம் கண்ட பிம்பம்
நானும் கொண்டதேன்?
நீயில்லா ஊரிலே
நான் தேயும் வெண்ணிலா!

நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

வானமெல்லாம் நீர்குடுவை
நீருற்ற யாருமில்லை
வறண்டு கிடந்தது பூமி
நீயில்லாமல்
நானும்
நானில்லாமல்
நீயும் என்ற
புள்ளியில்..

வெண்மதியின் வெள்ளிதுகள்கள்
வாணவீதியெல்லாம்
நீயும் நானும்
இடைவெளியில்லாமல்
கட்டியனைத்ததில்
உடைந்து நொருக்கியதோ
நாணத்தில் வான்மதி.

தனித்தனி
வர்ணமாய்ப் பிரித்து
உதட்டில் கரைத்து
உயிரை வரைந்த
ஓவியம் இது
உடல் காடெங்கும் முத்தம்.

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
- மீரா

எதை இழந்து தேடினாலும்
நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைகளே நீயாகிறாய்
பின் என்னதான் செய்வதாம்
உன்னை காதலிக்க மட்டுமே செய்வதை தவிற!