
கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
- மீரா