vidangan

பலகீனம்

தேவதைகளின் ஊர்வலம் 5 Comments

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.

அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.

அதனால்தான்
அவ‌ள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

காற்றினிலே வரும் கீதம்

தேவதைகளின் ஊர்வலம் 3 Comments

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே-
நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆஹ, என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் –
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்

- மீரா

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.