vidangan

அந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்

காதலிகள்.com, தேவதைகளின் ஊர்வலம் 2 Comments

முன் இர‌வின் முழு ஒளியில்
ப‌னி பொழியும் ந‌திக்க‌ரையில்
நின்றிருந்தேன் வெகு நேர‌ம்

வின்னைத் தாண்டி வ‌ரும் வ‌ழியில்
காவ‌ல் வைத்திருந்தேன் என் விழியை
அதில் செய்தியில்லை, என்னுள் செய‌லுமில்லை
இனி செதில்க‌ளுக்கும் உயிர் சொந்த‌மில்லை

யார் அடித்தும் வ‌லித்த‌தில்லை உன்
க‌ண் அடியில் காத‌ல் விதைக்கும் முன்னே
நீ உழுது பின் நான் விளைந்த‌ அந்த‌
ம‌னி ம‌னியான‌ ம‌ணிப்பொழுதில் நான்
ம‌ல‌ர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ
என் அருகினில்!

க‌ட‌வுளின் வாச‌ம், நான் க‌ண்டு கொண்ட‌
அந்த‌ ச‌ந்திப்பொழுதின் தோள் சாய்த‌தில்,
உன் சாய‌ல் க‌ண்ட‌ க‌ட‌வுளிட‌ம், நான்
சாந்தி கொண்டேன் உன் ச‌ம‌ய‌த்திட‌ம்!

ந‌திக்க‌ரையெல்லாம் நீல‌ம் ப‌டிந்து
என் நீண்ட‌ பிரிவை க‌ல‌ந்து வைக்கும்
நீ வ‌ருகையிலே அதில் கால் ந‌னைத்து
என் உயிரின் மிச்ச‌த்தையும் க‌ரைத்துவிடு.

வாஞ்சி

காதலிகள்.com, தேவதைகளின் ஊர்வலம் No Comments

எத்துனை எழுத்துக‌ள்,
பின் வார்த்தைக‌ள்,

கோர்தெழுத்ப்ப‌ட்ட‌ எதுகைக‌ள‌,
எழில்மிகு உவ‌மைக‌ள்,

ம‌ன‌ம்கொண்ட‌ ப‌டிம‌ங்க‌ள்,
ஆசையின் அலாய்ப்புக‌ள்,

இப்ப‌டியெல்லாம் எழுத‌ப்ப‌ட்ட‌
என் க‌விதைக‌ள்
விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்காக‌வே
உன் கை சேர்கின்ற‌ன‌!

ஏனோ உன் வாஞ்சையால்
அவைக‌ள் விருச்ச‌ங்களாகின்ற‌ன‌.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.