மார் 18

ஆயிரம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உனக்கு என்று
முத்தமிடுகையிலெல்லாம்
யுத்தமிடுகின்றாய் என்னோடு
சளைக்காமல் எச்சிலை அழித்து
சத்தமில்லாமல் இப்போதாவதிடு என்று
உன் கன்னம் காட்டுகின்றாய்
இம்சையே!
சத்ததிற்காக யுத்தமிடுகிறாயா?
முத்ததிற்காக சத்தமிடுகிறாயா?
