vidangan

திகட்டாத இம்சை

காதல், காமம் 4 Comments

என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்

திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்

இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.

இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!

*
எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை

தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி

தவழ்ந்தது
மனசு.

மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன

என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?

நீர்க்குமிழி

காதல், தேவதைகளின் ஊர்வலம் No Comments

 

எந்த திசையிலிருந்து
பார்த்தாலும்
உன்னையே
ஞாபகப்படுத்துகின்றன

மண்னில் கறையும்முன்
என் நெஞ்சம் கொண்ட
ஆசையினைப் போல

தண்டினில் தொங்கிய
நீர்க்குமிழ்கள்

வைரமணிகள்

காதல், தேவதைகளின் ஊர்வலம் 2 Comments


தேவதையே
உன் கால்கள்
விட்டு சென்ற
கடற்கறை சுவடுகளை,
மணலைவிடுத்து நான்
கைகளில் சேகரித்துக்கொண்டிருக்கின்றேன்!

எப்போதும் உன்னை
ஞாபகப்படுத்தும்
வைரமணிகள் கிடைத்த
சந்தோசத்தில்!

விக்கல்

காதல், தேவதைகளின் ஊர்வலம் No Comments

நீ தனியாக
அமர்ந்து
நம் நினைவுகளை
விழுங்கும் போதெல்லாம்
அன்பே!

விக்கல் எடுத்தே
வியர்த்து போகிறது
என் மனசு.

நகங்களின் இடுக்கினில்

கவிதை., காதல் No Comments

நீ தவறுகள் செய்யும்
பொழுதுகளிலெல்லாம்

எப்போதும் போல
இன்றும் மறந்து

என்னை உன் எச்சிலால்
நனைத்துவிட்டாய்

உன் நகங்களின்
இடுக்கினில்
வாழ்ந்துக் கிடப்பதுதான்
எவ்வளவு சுகம்.

நீயில்லாத வெறுமை

காதல், தேவதைகளின் ஊர்வலம் 1 Comment


விட்டு பிரியும்போதெல்லாம்
ஏனடி?
என் சிறகுகளை
திருடிக்கொள்கின்றாய்
நீ,

உன் வானத்தை
என்னிடம் தந்துவிட்டு!

நீயென்றாகிப்போன நான்

காதல், தேவதைகளின் ஊர்வலம் 2 Comments


உன்னை எங்கும்
சுமந்தே செல்கின்றேன்
கூட்டை தவிற்த்து
வாழ முடியாத
நத்தையினைப் போல

என்தன் செயல்களில்
உன்தன் சாயலை
தவிர்க்க முடியாமையும்
பாதையெங்கும் சுவடை
விட்டுச் செல்லும்
நத்தையினை போலத்தான்

நீயென்றாகிப்போன நான்
சுமந்துத் திறிகின்றேன்.

பாரடி என் மோகினி

காதல், தேவதைகளின் ஊர்வலம் 3 Comments

சொன்னால்
“நம்பமாட்டேன்”
என்கின்றாய்
முகம் திருப்பிக் கொண்டு!

முகர்ந்துப் பார்
கவிதையில்
உன் வாசம்

வருடிப்பார்
காகிதத்தில்
உன் பரிசம்

வாசித்துப்பார்
உன்னை நேசிக்கும்
என் இதயம்

நம்பிக்கை வரவில்லையா?
கசக்கி எறிந்துப்பார்

நான் இறந்துக்கிடப்பது
புரியும்.

______

ஏன்டீ என்னை இப்படி
இம்சை செய்கிறாய்?

நான் தந்த முத்ததில்
என்ன குறைக்கண்டாய்

திருப்பி வாங்கிக்கொண்டு
வேறொன்று தா என்று,
உன் விழியடியில்
கிரங்கிக் கொண்டிருக்கும்
இவனிடம், தலையனை கொண்டு
அடிக்கின்றாய்.

______

நீ கோபமாக
இருக்கின்றாய்.

சரி, பிறகென்ன
நீ முத்தம்
தந்து என்னிடம்
கெஞ்சுவாய்

இனிமேல்
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்
என்று.!

அதற்கேனடி
இவ்வளவு நேரமாக
காற்கவைக்கின்றாய் என்னை?

_______

மக்கு,
உன் தவறுகளில்,
சரியாக செய்ய
கற்றுத்தருபவள்
நான்.

அதற்காக
முத்தத்தை கூடவா
ஒழுங்காக இடமாட்டாய்?

____

உன் ஞாபகங்களுக்கு
அப்பால் நின்று
நனைந்து கொண்டிருக்கின்றது
என் மனசு

குடைக்கேட்டு
வரவில்லை
என் கவிதைகள்
உன்னிடம்

நீ சிந்திவிடும்
ஒவ்வொரு கண்ணீர்
துளியிடமும்
மன்னிப்புக்கேட்கத்தான்.

************

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.