vidangan

அதே கண்கள்

காதல் No Comments

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்

இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

அறியாமலே

காதல் 1 Comment

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே

கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு

தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்

ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?

நிழலாய் பின் தொடரும் வெளிச்சம்

தேவதைகளின் ஊர்வலம் No Comments

என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை

நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை

ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்

என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.