vidangan

என்னடி செய்தாய்

காதல் 1 Comment

பூப்பூக்கா செடிகளை
மட்டும் நட்டு வைத்தேன்
பூவனம் முழுவதும்
நான்

என்னடி செய்தாய்
நீ
இலைகளும் பூத்து
வீசுகின்றது உன் வாசம்..

மாலை மழையில்

காதல் 1 Comment


மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்

மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த

அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

நிலவாக நீ வருவாய் என்று

காதல் No Comments

உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க

நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி 
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்

நிலவாக நீ
வருவாய் என்று.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.