நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது
விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது
அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.
நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது
விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது
அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.
நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்
அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்
நான்
நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…
புள்ளிகளை
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்
தினமும்
உன் வீட்டு
வாசலில் நீர் தெளித்து கோலம்
நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )
நான் தெரிந்தே
காலினை மிதித்து
தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்
கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்
இன்றுவரை
காணமுடியவில்லையடி
தேவதையே உன்
கால்களை..
உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை
என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை
நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை
நாம் தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை
முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன
ஏதோ ஒரு
தவிப்பினில்
எதையோ அடைகின்றோம்
என்று
இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.
நீயில்லா
வாழ்க்கை என்பது
எனக்கு
நிலவில்லா
வானம்போல
இருந்தும்
வானில்
உன் ஞாபக நட்சத்திரங்கள்
மின்னிபடி என்னை
வாழவைத்துவிடுகின்றது.
நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,
அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!
சரி போ…
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
எப்படி
மூண்டது நமக்குள்
போர்,
வெற்றி
தோல்வியின்றி
ஆசை எண்ணங்களை
சிந்திக்கொண்டிருக்கின்றோம்
முடித்துவிட
மனமில்லாமல்
எப்பொழுதும்!
என் இதயத்தின்
மேல் கால்வைத்து
கடந்து சென்ற
பலரில்
சுவடுகளை மட்டும்
விட்டுச் சென்றவள்
நீ!