vidangan

86.கவிதை எழுதி கவிஞனாகி !

காதல் No Comments

வண்ணங்கள்
போதவில்லை என்றா

வானவில்லில்
உன் வண்ணம்

மேகங்கள்
இல்லையென்றா

உன் கார்கூந்தல்
வானில்

நவமணிகள்
நாட்டிலில்லை என்றா

கண்மணிகள்
உன் உடம்பில்

தென்றலுக்கு
குளிர்ச்சியூட்டவா

வெளிவிடுகின்றாய்
உன் சுவாசங்களை

பூவினங்களுக்கு
மோச்சம்க் கிட்டவா

நீ தலைவாரி
பூச்சூடினாய்

நட்த்திரங்கள்
ஒளிபெறவா

நொடிப்பொழுதும்
கண்சிமிட்டுகிறாய்

அதிசயங்களில்
இடம் பெறவா

நடைபாதையில்
சுவடுகளை விட்டுவிடுகிறாய்

பெண்னினத்தில்
அழகி இல்லையென்றா

நீ உன்னை
படைத்துக்கொண்டாய்

எப்படி முடிப்பதென்று அரியாமல்
இப்படியே முடித்துவிடுகின்றேன்

நான்
கவிதை எழுதி
கவிஞனாகியதற்கு

உனக்கு
நன்றி.

85.ஒரு காதலன் கவிஞனாகின்றான்!

காதல் No Comments

உன்னிடம் காதல் சொல்ல
ஒற்றை ரோஜாவோடு
வீட்டைவிட்டு வெளியேரிய போது

போர்கள உலகமும்
வாளேந்திய வீரர்களையும்

வீதீயின் நடுவே கண்டுகொண்டேன்

பயம் தைரியத்தை புதைத்தது
மனம் தோல்வியை தழுவிக்கொண்டது

ஆரத்தழுவிய ரோஜாமுட்கள்
விரல்களில் குத்தி ரத்தத்துளிகளை
எனக்கு பரிசளித்தது

சரி இனி என்செய்ய?

நீ என்னுள் விதைத்து விட்ட
கவிதைகளுக்கு நீரூற்றி
காதலித்துவிட முடிவெடுத்துவிட்டேன்

ஒரு காதலன்
கவிஞனாகின்றான்!

உன்னாலே.

84.தகரம்

காதல் 1 Comment

எப்படிதான்
கண்டுகொள்கிறதோ

காட்டாறென
கடந்து செல்லும்
கூட்டத்தின் நடுவினில்

என்
கண்கள் உன்னை

சரிதான்
காந்தத்தின் ஈர்ப்புக்கு
முன்னால்

தகரம்
தப்பிக்கவாமுடியும்

83.தட்டாம்பூச்சி

காதல் No Comments

என்னுள்

உனக்காக
காத்துக்கிடக்கும்
தருணங்களில்
எல்லாம்

சிறுவயதில் தட்டாம்பூச்சி
பிடித்த அனுபவங்களே
ஆழுமைசெய்கின்றன

82.மழைத்துளி

காதல், மழைக்காலம் No Comments

அந்ந மழைக்கால
சந்திப்புக்கு பின்

ஒவ்வொரு மழைத்துளியும்
உன் நினைவுகளில்
என்னை
வானத்திலிருந்து
விழச்செய்கிறது.

81.ஒருத்தி

காதல் No Comments

என் கவிதைகள்
தவம்கிடந்து
வரமொன்று
பெற்றுக்கொண்டது
கடவுளிடம்

என்னவளை தவிர
இனி அழகிகளை
படைத்துவிட வேண்டாம்
என்று

யார் ஒருவரும்

உலகத்திலே நீ ஒருத்திதான்
அழகானவள்

என
வர்ணிக்க கூடாதென்பதற்காக.

80.தனிமை

காதல் No Comments

நீ ஒற்றை எழுத்தாக
இருந்தாலும்

என்னால் வாக்கியமாகதான்
வாசிக்க முடிகிறது

இது எதனால்? என்று
புரியாத வேளையின்
தனிமையும்
புத்தகமாகத்தான்
தெரிகின்றது.

79.அதே கண்கள்.

காதல் No Comments

உன்
வருகைக்காக
காத்திருத்த
கண்கள்

கண்டப்பின்
கடந்துச் செல்லும் வரை
நிலத்தையே
பார்த்தது

அதே கண்கள்.

78.வீதி உலா

காதல் No Comments

வெளிச்சங்களை
விட்டுவிடு

பாவம்
இருட்டை
தேடிப்பிடித்து
ஓளிந்துகொள்கிறது

சொன்னதை கேட்காமல்
வீதி உலா வந்துவிடுகிறாய்
பகலில் நீ.

77.பூமரம்

காதல் No Comments

உனக்காக
காத்துகிடக்கின்றேன்
அதே சாலையோர
இருக்கையில்

இன்றும்
பூத்திருக்கின்றது
எனக்கு பின்னால்
பூமரம்.

76.குறங்கு மனசு

காதல் No Comments

மனசை அன்பில்
வார்த்தெடுத்து
வசதியாக வாசலில்
வைத்தப் போதுதான்

அன்புக்குரியவர்களின்
அரவணைப்பை
அறிந்து கொண்டது
குறங்கு மனசு.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.