பதியம் போட்ட
வண்ண ரோஜாக்கள்
ஊரெல்லாம்
பூத்துக் குளுங்கியது
தினம்
விதவைகள்
நீரூற்ற!
பதியம் போட்ட
வண்ண ரோஜாக்கள்
ஊரெல்லாம்
பூத்துக் குளுங்கியது
தினம்
விதவைகள்
நீரூற்ற!
கல்லரை முன்
கண்ணீர் சிந்தி
கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே
உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்
நான்!
உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு
முற்றத்தில் சொட்டியது
அந்திமழை
சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!
மனசெல்லாம்
நீ!
என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி
காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்
உன்னை பிரசுவிக்க!
தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி
நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி
நீ
என்ன முரண்களின்
மகளா!
என் உதடு யாத்திரீகன்கள்
உன் செவ்விதழை சுவைத்தபோதே
பிடித்துவிட்டது எனக்கு
செவ்வாய் தோசம்!
காட்சிப்பிழைகளில் கூட
உந்தன் இன்னொரு
பிம்பத்தை ஏற்க மறுக்கின்றது
என் கண்கள்.
உனக்குப் போட்டியாக
இன்னொருத்தி இருப்பதாக
நினைத்து.
சினேகிதா!
தேளை தொட்டுப்பர்த்ததற்கா
இப்படி கூச்சலிடுகிறாயே
உன்னிடமுள்ள என்னுயிரை
அவ்வளவு எளிதாக தேளிடம்
தந்துவிடுவாயா என்ன.
வெண்நிலாக்கள் என்று
விற்பனை செய்துகொண்டிறுகிறேன்
நீ
ஒட்டி எரிந்த
ஸ்டிக்கர் பொட்டுக்களை.