æ
படிமங்கள்
ஒரு நாயகியும்
...சில ஞாபகங்களும்
இரண்டு வரிகள்
எனக்கா எழுத மாட்டாயா?
வினவி விட்டு
சென்றுவிட்டாய் நீ!
மொத்த தமிழெழுத்துக்களும்
என்னுடன் யுத்தத்திற்கு
தயாராகிவிட்டது!
சமாதன உடன்படிக்கைக்கு
பின்- இருபது வார்த்தைகளுடன்
எழுதத் தொடங்கினேன்!
கைக்கலப்பு மேலோங்கிவிட்டது
அந்த எழுத்துகளுக்கிடையே.
முதழெழுத்தாய் யார் நிற்பதென்று!
பின் என்னதான் செய்ய?
இதையே வைத்துக்கொள்
என் அடிமை சாசனமாக!
இதற்காக நீ மற்றொரு
உலக யுத்தத்தை
என்னிடம் தொடங்கிவிடாதே!
Copyright © தொட்டராயசுவாமி 2007 - Designed byPuppet
Media
கவிதைகள் படிக்க Click here !
Puppet Media Low Price Web Hosting & Design !
PMSoft Download free softwares !