நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!சில்மிஷியே
அருகினில் வா!
*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்
“தேவதை ஜாக்கிரதை”
*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்
பதறுகின்றது என்
மனசு
ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..
*
நீ ‘ம்’ கூட
சொல்லவேண்டாம்
கடைக்கண்ணால்
மட்டும் பார்
உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!
*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே
எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…
*
“க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”
புரிகின்றதா?
இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்
*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது
கோபமாய் வருகின்றது
தேவதையே..
*
நீ
தாமதமாகவே
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை
களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!
*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்
முத்தம்.
*
நீ என்னுடன்
சண்டையிடுவதே
முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்
அது உனக்கும்
தெரியும்
பின் எதுக்கு
சண்டை?