vidangan
  தோழர்களே இது விளம்பரம் அல்ல இந்தியாவின் தேவை!!!

உங்களால் இந்தியாவில் உள்ள ஒரு குழந்தையின் வருமை ஒழிந்து, சுகாதரமான சத்துள்ள உணவு கிடைக்கப்பெற்று வளமான கல்வி பெற உதவுங்கள்! மேலும் விவரங்களுக்கும்/ நிதி உதவி அழிக்கவும்:
0422 6532990 / 96 . Web: Save the Children


காதலிகள்.com(2)

காதலிகள்.com 3 Comments

 

நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ

பத்திரப்படுத்த
வேண்டும்

என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..

*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்

உண்மையும் உண்டு.

*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது

அது உன்னுடன்
மட்டும் எனும்போது..

*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே

உன்னிடமிருந்து
மட்டும்

காதலிகள்.com(1)

காதலிகள்.com 2 Comments

நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!சில்மிஷியே
அருகினில் வா!

*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

“தேவதை ஜாக்கிரதை”

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்

பதறுகின்றது என்
மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..

*
நீ ‘ம்’ கூட
சொல்லவேண்டாம்

கடைக்கண்ணால்
மட்டும் பார்

உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே

எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
“க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”

புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது

கோபமாய் வருகின்றது

தேவதையே..

*
நீ
தாமதமாகவே

வருவாய் என்றாலும்

நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை

களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்

முத்தம்.

 *
நீ என்னுடன்
சண்டையிடுவதே

முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்

அது உனக்கும்
தெரியும்

பின் எதுக்கு
சண்டை?

107.மன வானொலி!

காதல் No Comments

உன் கண்கள் என்ன
பன்பலைவரிசையா?

எப்போதும்
ஏதோ ஒன்றினை

என்
மன வானொலி

இதயத்தில்
ஓயாமல்  ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது!
உன் நினைவுகளை!

106.கேள்வியின் நாயகி?

காதல் No Comments

என் கண்களுக்கு கால் முளைத்து
உந்தன் பின்னால் சென்றதேன்?

இரண்டு துண்டாய் இதயம் உடைந்து
உனக்காக ஒன்று துடிப்பதேன்?

எனை கடந்து செல்லும் போது
உன் நிழல் எனை உரசுவதேன்?

யாருமற்ற சமவெளியினிலும்
யாதுமாகி எனை நீ ஆள்வதேன்?

அத்தை பெண் என்னும் அழகிகள் கூட
உன் அழகினில் அடங்கிப்போனதேன்?

நான் பரிக்கும் ரோஜாவிற்கு மட்டும்
உனையடையா ஜென்மம் ஏன்?

நீ உடுத்தும் உடைகளுக்குமட்டும்
தினம் தேவதையின் பரிசம் கிட்டுவதேன்?

அலை அழித்து சென்றப்பின்னும்
கடற்கரையில் உன் சுவடுகளை கண் தேடுவதேன்?

கேள்வியின் நாயகியாக என்னுள்
வேள்விகளை நீ நடத்துவதேன்?

எனக்கு தெரியும்
இரண்டில் ஒன்று சொல்லிவிடுவாய்!

நான் சொல்வது எப்போது
உன்னிடம்?

105.சகியே!

காதல் 1 Comment

இதயக்கூட்டில்
உன்னை வைத்தேன்
தினமும் அதிலே
சுவாசம் செய்தேன்

வழிகள் எங்கும்
வழியை பதித்தேன்
பனியில் கூட
சூட்டை உணர்ந்தேன்

எந்தன் ஜீவனே!

வரங்கள் வாங்க
சாபம் சுமந்தேன்
வாழ்க்கை வாழ
உயிரை துரந்தேன்

பயணம் நூறு
கால்கள் கண்டும்
சேரும் இடம்
தெரியவில்லையே

எந்தன் கண்மனி!

நீ
காதல் தீயை
கண்ணில் வைத்து
காமன் அம்பை
நெஞ்சில் தைத்தாய்

ரோஜாக்கூட்டம்
நான் வளர்க்க
முள்ளை நீயும்
சூடிக்கொண்டாய்

உன் கண்துடைக்க
என் கைகள் இருந்தும்
இமைகளுக்குள்ளே
ஏன் தேக்கிக்கொண்டாய்
கண்ணீரை

சகியே!

104.மகரந்த சேர்க்கை

அன்பு, காதல் No Comments

நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது

விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது

அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.

103.ஈரமுத்தம்

காதல், நீ No Comments

நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்

அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்
நான்

நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…

102.கோலம்

காதல், தேவதை, நீ No Comments

புள்ளிகளை 
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்
தினமும்

உன் வீட்டு
வாசலில் நீர் தெளித்து  கோலம்

101.பேரழகி

காதல், நீ No Comments

நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )

100.தேவதையின் கால்கள்

காதல், தேவதை No Comments

நான் தெரிந்தே
காலினை மிதித்து

தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்

கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்

இன்றுவரை
காணமுடியவில்லையடி

தேவதையே உன்
கால்களை..

99 ♥ தவிப்பு

அன்பு, காதல் 1 Comment

உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை

என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை

நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை

நாம் தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை

முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன

ஏதோ ஒரு
தவிப்பினில்

எதையோ அடைகின்றோம்
என்று

இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.

98♥ நீ நிலா நான்

காதல் No Comments

நீயில்லா
வாழ்க்கை என்பது
எனக்கு

நிலவில்லா
வானம்போல

இருந்தும்

வானில்
உன் ஞாபக நட்சத்திரங்கள்
மின்னிபடி என்னை
வாழவைத்துவிடுகின்றது.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS